தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தை ஈபிஎஸ் ஏற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ், ஈபிஎஸ் கையொப்பம் அவசியம் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒப்புதல் கிடைக்காததால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…