அரசியல் கட்சிகளின் இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் விசாரித்து வந்த இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…