இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பாஜக மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, "நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என்றும், காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனையடுத்து முக்கிய நகரங்களில் உளவுத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…