மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? இலங்கையில் ராஜபக்சே, கோவிலை இடித்தான் கெட்டான். அது போல் இங்கும் கோவிலை இடித்தவர்கள் கெட்டார்கள் என மதுரை ஆதீனம் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ஆதினத்தை மிரட்டும் வகையில் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சிதம்பரம் கோயிலிலும் அமைச்சர் தலையிடுகிறார் இது விளைவுகளை ஏற்ப்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…