தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே மழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மேக வெடிப்பு காரணம் அல்ல என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.
அமர்நாத் பாத யாத்திரைக்கு இந்த ஆண்டு ஏராளமான யாத்ரீகர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் பெய்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின. மேக வெடிப்பு காரணமாக தான் இந்த உயிரிழப்பு ஏற்ப்பட்டதாகவும், இதனை முன்கூட்டியே கணிக்க வானிலை மையம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இது மேக வெடிப்பு இல்லை என்றும், குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் மழைப்பொழிவு அதிகமாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மாலை 4:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை அந்தப் பகுதியில், 31 மிமீ மழை பதிவாகியுள்ளதாவும், ஒரு மணி நேரத்தில் 100 மிமீ மழையைப் பெற்றால் தான் அது மேக வெடிப்பு என வகைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…