ரேஷன் கார்டுகளில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கான குறை தீர்ப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று காலை 10 மணி முதல், சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் ஜூலை 22 மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:- இளம் பெண்களின் கனவு நாயகன் விஜய் தேவரகொண்டாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்…!!
அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்களை நேரில் வருகை தர இயலாதவர்கள், மூத்தகுடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருள்கள் மீதான் குறைகளையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…