மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அம்ர்நாத் யாத்திரைக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு சற்று பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அம்ர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, யாத்திரை செல்பவர்களை கண்காணிக்கும் வகையில் இந்த ஆண்டு புதிய ரேடியோ அலை வரிசை அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாத்திரை செல்ல 3 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக அம்ர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் குகைக் கோயிலை நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வானிலை சீரான பின்பு இவர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…