தமிழ்நாட்டில் பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தாலே போதும் தமிழகம் முன்னேறிவிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், தான் 35 வயதிலேயே மத்திய அமைச்சராகி அனைத்தையும் பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் பார்த்துவிட்டேன் என்றும் தனக்கு வேண்டியது தமிழகத்தின் முன்னேற்றம் மட்டுமே என்றும் கூறிய அவர், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்றும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…