காரியாபட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தாய் - மகன் பரிதாபமாக பலியாகியுள்ளானர்.
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகே திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் அவரது தாய் மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…