திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல் இருந்தால், உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குவாரிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்பதற்காக சுரங்கத்துறை நிபுணர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று ஆய்வு செய்ய அமைச்சர் சென்றபோது உள்ளூர் மக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…