Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆந்திராவில் பயங்கரம்:- ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்த 8 பேர் பலி..!

Bala June 30, 2022 & 09:05 [IST]
ஆந்திராவில் பயங்கரம்:- ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்த 8 பேர் பலி..!Representative Image.

ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எறிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில்  காலை 7 மணியளவில்  சில்லகொண்டையா பள்ளி கிராமம் அருகே விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ  மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததில், ஆட்டோ தீப்பிடித்துள்ளது. இதனையறிந்த ஓட்டுநர் கிழே குதித்த நிலையில் உள்ளே இருந்த விவசாயிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உள்ளூர் வாசிகள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதி மக்கள் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்