ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எறிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் காலை 7 மணியளவில் சில்லகொண்டையா பள்ளி கிராமம் அருகே விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததில், ஆட்டோ தீப்பிடித்துள்ளது. இதனையறிந்த ஓட்டுநர் கிழே குதித்த நிலையில் உள்ளே இருந்த விவசாயிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உள்ளூர் வாசிகள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதி மக்கள் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…