கல்யாண விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரில் நேற்று (ஜூன் 18) இரவு வேலு - ஹிமன் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரவு விருந்து பரிமாறப்பட, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மயங்கி விழுந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 450 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…