சமீபத்தில் அனைவரது மத்தியிலும் பேசு பொருளாக மாறிய ஆத்தா அன்னபூர்ணி தனது பக்தர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.
அன்னப்பூரணி அரசு அம்மா என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், சமீபத்தில் நான் கடவுளின் அவதாரம் என கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தினார். மேலும் சில தனியார் ஊடகங்களுக்கு பேட்டியளித்து அதன் மூலம் பிரபலமான ஆத்தா அண்ணாபூரணி, பல விமர்சங்களையும் சந்தித்தார். மேலும் பலர் அவரை கைது செய்ய வேண்டும் என காட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அன்னப்பூரணி தனது பேபுக் பக்கத்தில் பதிவு ஒன்ரை வெளியிட்டுள்ளார். அதில் உங்களை தேடுங்கள் . உங்கள் ஒருவொருவரையும் இயக்க வைத்துக்கொண்டிருக்கும் இயக்க சக்தியே இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உணர்வு மயமாக அனைத்து இயக்கங்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இதைத்தான் கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என கூறுகின்றனர், அதன் பெயரே இயற்கை, இறைவன், இறைத்தன்மை, அல்லாஹ், பரமபிதா, நிர்வாணம் என்பதெல்லாம் என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…