Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க ஒப்புதல்

Bala May 24, 2022 & 17:20 [IST]
இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க ஒப்புதல்Representative Image.

இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு குவாட் மாநாட்டின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றிணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று (மே 24) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களை பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

 குவாட் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. நம்முடைய நம்பிக்கை, மனவுறுதி ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும், ஆர்வமும் அளிக்கிறது" என தெரிவித்தார். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு குவாட் மாநாட்டின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்