Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை...!

Bala August 06, 2022 & 17:15 [IST]
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை...! Representative Image.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாக்க வேண்டி கோடாலி கருப்பூர் கிராமத்தில்  அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாக்க வேண்டி  அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ ஆதி அம்மாள் ஸ்ரீ பாவாணராயன் ஸ்ரீ வீரன் மற்றும் ஸ்ரீ மயான புத்திரன் ஆகிய சுவாமிகள் வெள்ளி கவசங்கள் சாத்தபட்டு  ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலையத்தில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் குத்து விளக்குகளை ஏற்றி, மலர்களால் அலங்கரித்து குங்குமம் மற்றும் மலர்களால் அதற்கு பூஜை செய்து வழிபட்டனர். 

இந்த வழிபாட்டின் மூலம் கருப்பூர் பகுதி விவசாய நிறைந்த பகுதி என்பதால் தொடர்ந்து வரும் வெள்ளப்பெருக்கில் இருந்து விவசாயத்தை காத்து பயிர்கள் நல்ல முறையில் விளைவித்து அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் தொழில் செய்பவர்கள் தொழிலில் நட்டம் ஏற்படாமல் இருக்க நல்ல முறையில் தொழில் செய்ய வேண்டிய உலக நன்மை வேண்டியும் இந்த குத்து விளக்கு பூஜை செய்தனர். இந்த குத்து விளக்கு பூஜையில் குலதெய்வ வழிபாட்டாளர்கள், மறலாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்