Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலியல் வழக்கு.. கர்நாடகாவின் டாப் மடாதிபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!!

Sekar September 02, 2022 & 20:02 [IST]
பாலியல் வழக்கு.. கர்நாடகாவின் டாப் மடாதிபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!!Representative Image.

கர்நாடகாவின் முருக மடத்தின் தலைமைப் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு செப்டம்பர் 5 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நேற்று இரவு கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சிறையில் அடைக்கப்பட்டார்

64 வயதான சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக போக்சோ மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் சரணாரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க லிங்காயத் மடங்களில் ஒன்றின் தலைமை பீடாதிபதி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்