திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 01.10.2022 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…