Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனமழை எதிரொலி:- 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மூடல்..!

Bala May 19, 2022 & 11:44 [IST]
கனமழை எதிரொலி:- 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மூடல்..!Representative Image.

அசாமில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவங்களை 2 நாட்கள் மூட  கச்சார் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 

பிரம்மபுத்திரா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் (அரசு மற்றும் தனியார்) மற்றும் அத்தியாவசியமற்ற தனியார் நிறுவனங்களை 48 மணி நேரம் (மே 19 மற்றும் 20) கச்சார் மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்