கோவை, வ.உ.சி. மைதானத்தில் பொருநை தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், திமுக ஆட்சியில் இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை என்றும், "சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்பி ஆ.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…