சென்னை அண்ணா சாலையில் சுரேந்தர் சிங் என்பவர் தனது சொகுது காரில் (ஃபோர்டு) சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதை அணைக்க காரின் உரிமையாளர் முயற்சிக்க, கண் இமைக்கும் நேரத்தில் மலமலவென தீ பரவத் தொடங்கிவிட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனார். தகவலின் பேரில் விரைந்து வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது குறித்து நடந்த விசாரணையில் காரின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…