தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த காலாண்டுத் தேர்வுக்கான கேள்வித்தாளை மாவட்ட அளவிலேயே தயார் செய்து தேர்வை நடத்திக் கொள்ளுமாறும், செப்டம்பர் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்குமாறும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கக் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…