Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனமழை எதிரொலி:- 44 பேர் பலி..56 பேர் மாயம்..!

Bala May 30, 2022 & 12:18 [IST]
கனமழை எதிரொலி:- 44 பேர் பலி..56 பேர் மாயம்..!Representative Image.

வடகிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் சுமார்  44 பேர் பலியாகியுள்ளதாகவும் 56 பேர் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் மோசமான காலநிலை காரணமாக பெய்த அதிதீவிர கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதாகவும், 56 பேர் காணவில்லை என நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீபு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் குறைந்த  போதிலும் இன்னும் இரண்டு நாட்களாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அநாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேதமடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்