தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. BA.4 என்பது ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையாகும். இந்த புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. இது பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு” எனத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.