கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண் எம்பி ஒருவர் சிலிண்டரை அலேக்காக தூக்கி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான நடவடிக்களால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், அரிசி, தயிருக்கு கூட ஜிஎஸ்டி விதித்துள்ளதால் ஏழை , நடுத்தர வர்க்கத்தினர் திணறி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினார். அப்போது பெண் எம்பி ஒருவர் கேஸ் சிலிண்டரை தலைக்கு மேல் தூக்கி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது "விலைவாசி உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்படி வாழ்வது" என்ற வாசகத்துடன் கூடிய காஸ் சிலிண்டர் படம் பொறித்த பதாகையையும் ஏந்தியிருந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…