Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முக்கிய தலைகளை குறிவைக்கும் அல்கொய்தா...பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி...!

Bala August 04, 2022 & 11:45 [IST]
முக்கிய தலைகளை குறிவைக்கும் அல்கொய்தா...பாதுகாப்பு வளையத்திற்குள்  டெல்லி...!Representative Image.

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம்  கோலாகலமாகக்  கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா அன்று டெல்லி  செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் தான் சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்கும் வகையில் மக்கள் நிறைந்து காணப்படும் இடங்கள், முக்கிய தலைவர்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து டெல்லி, மும்பை, சென்னை,உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்