பாபா ராம்தேவ்க்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தின் பெயர் பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ருச்சி சோயா நிறுவனம் ரூ.690 கோடி நஷ்டத்தை சந்தித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரூ.2,925 கோடி வங்கிக்கடன் முழுவதையும் செலுத்தியது. மேலும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் என்ற பெயர் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. எனவே பெயரை மாற்றுவதில் நிறுவனம் எந்த பெரிய தடையையும் சந்திக்கவில்லை.
சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பெயரை ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பதில் இருந்து பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் என மாற்ற அதன் வாரியம் முடிவு செய்துள்ளதாக ருச்சி சோயா கூறினார். இன்றைய பிற்பகல் வர்த்தகத்தில் ருச்சி சோயாவின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து ரூபாய் 1,116 ஆக இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டில், பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…