திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி, ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். மாசிலாமணி பிரான்சில் தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே பிரான்சில் நாட்டில் தான் பிறந்து வளர்ந்துள்ளனர்.
தற்போது தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் இந்த மூன்று அக்கா, தங்கைகளும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். தனது மூன்று மகள்களின் காதலையும் ஏற்றுக்கொண்ட மாசிலாமணி, அவர்களுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார்.
அந்த வகையில், பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் இருக்கும் தனது சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த மாசிலாமணி, ஆனந்தி தம்பதியினரின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராம்குமார், ஜார்ஜ், மற்றும் மஜ்ஜூ என்ற மூன்று இளைஞர்களுக்கு திருச்செந்தூர் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மூன்று அக்கா, தங்கைகளுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான, ஒரே முறையில் நடந்த இந்த திருமணங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த மூன்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…