குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ மற்றும் பிச்சி பூக்களின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டும் சந்தைக்கு பிச்சி, மல்லிகை பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில தினங்கள் முன்பு வரை கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சி தற்போது 650 ரூபாய்க்கும், மல்லிகை 150 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் சம்பங்கி, அரளி, வாடாமல்லி, கேந்தி என அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இது பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…