Online Rummy:-ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சிறப்பு சட்டம் குறித்து ஆராய முதல்வர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஐடி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி குறித்து சிறப்பு சட்டத்துக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உரிய தரவுகளுடன் இந்த குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வரக்கோரி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…