Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குழந்தை திருடன் என நினைத்து.. பிச்சைக்காரருக்கு நேர்ந்த அவலம்!!

Sekar October 08, 2022 & 14:11 [IST]
குழந்தை திருடன் என நினைத்து.. பிச்சைக்காரருக்கு நேர்ந்த அவலம்!!Representative Image.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் ஒரு கும்பல், குழந்தை கடத்துபவர் என்ற சந்தேகத்தின் பேரில் பிச்சைக்காரர் தாக்கப்பட்டுள்ளார். அதே பகுதியில் ஏற்கனவே இதேபோல் மூன்று பேர் தாக்கப்பட்ட நிலையில், தற்போது நான்காவதாக ஓருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிச்சைக்காரரை தாக்கியதாக இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர்.

பிச்சைக்காரரை உள்ளூர் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி, பின்னர் அவரை மனநல காப்பகத்திற்கு அழைத்து சென்று அங்கு தங்க வைத்துள்ளனர்.

குழந்தைகளை தூக்கிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் உள்ளூர்வாசிகள் மக்களை அடித்துத் தாக்கும் இரண்டாவது சம்பவம் இதுவாகும். சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட மேலும் பலரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்