கொல்கத்தாவில் பிரபல மாடல் நடிகையும், சின்னத்திரை நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பெங்காலி நடிகையும், மாடால் அழகியுமான மஞ்சுஷா நியோகி வசித்து வந்துள்ளார். இன்று நடிகை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 15 நாட்களில் மேற்கு வங்கத்தில் 3 நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரையுலகினரிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது. இருப்பினும் காதல் காரணமாக தற்கொலையா, அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…