உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அதன் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி.சண்முகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…