இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது மாணவியிடம் தினேஷ் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை லாஜூக்கு வரவழைத்த இளைஞர் எல்லை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி மாணவியை மீண்டும் தினேஷிடம் பேசி அவரை கன்னியாகுமரிக்கு வரவழைத்துள்ளனர். அதனை நம்பி வந்த தினேஷை மறைந்து இருந்து போலீசார் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…