பீகாரில் ரயிலில் திருட வந்த திருடனை 15 கிலோமீட்டர் தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, பின்னர் போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய ரயில்வேயில் கொள்ளை நடப்பது ஒன்றும் புதிதல்ல. சமூக ஊடகங்களில் இதுபோன்ற சம்பவங்களின் பலநூறு வீடியோக்கள் மற்றும் படங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இதுபோன்ற கொள்ளைகளில், கொள்ளையர்கள் சம்பவ இடத்திலேயே தண்டிக்கப்படுவது அரிது.
இருப்பினும், பீகாரில் ஒரு திருடன் கையும் களவுமாக பிடிபட்டு தண்டிக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோவில், ஓடும் ரயிலில் இருந்து மொபைலை திருடிய நபரை பிடித்த பயணிகள், ரயில்நிலையம் வரும் வரை சுமார் 15 கிலோமீட்டருக்கு ரயிலுக்கு வெளியே ஜன்னலில் தொங்கவிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். தன்னை விட்டுவிடும்படி திருடன் கெஞ்சுவதையும், தன்னை விடுவிக்குமாறு பயணிகளிடம் திருடன் கேட்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ பீகாரின் பெகுசராய்யில் உள்ள சாஹேபூர் கமால் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், இரவு 10 மணியளவில் சமஸ்திபூர்-கதிஹார் பயணிகள் ரயிலில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…