தர்மபுரியில் பாரதமாத கோவில் பூட்டை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மாபுரி மாவட்டதில் பாஜக சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 11ம் தேதி பாதயாத்திரை நடைபெற்றது.இதனை முன்னாள் எம்பி.ராமலிங்கம் துவங்கி வைத்தார். அப்போது சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள பாரதமாதா நினைவு ஆலயத்திற்கு பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் பாஜகவினர் சென்று கல்லை கொண்டு பூட்டை உடைத்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து பூட்டை உடைத்தது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…