கிரிமியா பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் ஆயுதங்கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கு ஒன்றில், வெடி விபத்து ஏற்ப்பட்டதாகவும், இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ள நிலையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா, படையெடுப்பாளர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்ப்படுத்தும் என உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் ட்வீட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…