ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளதாக தலிபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தின் நேற்று முன் தினம் திடீரென பெய்த கனமழையால் ஏராளமான கிராங்கள் வெள்ள நீரில் சூழ்ந்துள்ளாதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் போக வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்ப்பட்டுள்ளதாகவும், இதுவரை வெள்ளத்தில் சிக்கி 31 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்ப்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…