பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் சென்றுள்ளது. அந்த கடிதத்தை பிரிந்து பார்த்த போது பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு தெரியவந்தது. இதனையடுத்து கடிதத்தை கைப்பற்றிய உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்து சேலம் மாவட்டத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்வர்களின் விபரங்களை சேகரித்து சேலம் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை பழைய விமானம் உள்பட பிரதமர் மோடி பங்கேற்கும் இடங்கள் எஸ்பிஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற நிலையில், அவர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…