திருவள்ளூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…