புல் போதையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை விமான நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் சென்னை காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் மற்றும், சென்னை விமான நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து விமான நிலையம் மற்ரும் முதல்வர் இல்லத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினார். அதில் போலியான அழைப்பு என தெரியவந்தது.
இதனையடுத்து மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்த நபர் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கஞ்சா போதையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இவ்வாறு பேசியதாக தெரிவித்தார். பின்னர் தேனாம்பேட்டை போலீசார் தாமரைக்கண்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…