திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் விழாவிற்கு சென்ற எச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்ததையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பாக கங்கா மமா ஆரத்தி நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இந்த நிகழ்சிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில், பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்காக திண்டுக்கல் மாவட்டம் பழநியை நோக்கி சென்று கொண்டிருந்த எச்.ராஜாவை, சத்திரப்பட்டியில் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்படும் போது அதிகாரிகளை எச்.ராஜ தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவலறிந்த பாஜகவினர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…