இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தற்போது 95 வயதாகிறது. மாறுபட்ட சித்தாந்தவாதியாக இருந்தாலுமே கூட அரசியலில் அனைவராலும் விரும்பக்கூடிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவருக்கு சமீபத்தில் 75வது சுதந்திர தின விழாவின்போது, தகைசால் தமிழர் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
அப்போது 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உடனடியாக நல்லகண்ணு வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் இன்று திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…