பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யப்போவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்துள்ளதால் கட்சிக்குள் போரிஸ் ஜான்சனுக்கு எதிரான குரல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் போரிஸ் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…