மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தியாகிகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியில் சிலைகள் நிறுவப்படும் என்றார்.
அதன்படி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருதுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.34 லட்சம் மதிப்பில் 3 மாதங்களுக்குள் சிலையை நிறுவி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…