வீடு புகுந்து பிரபல நடிகை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் பட்கார் மாவட்டம் அடுத்த ஹிஷோரா பகுதியில் த்னது 10 வயது சிறுமியுடன் வசித்து வந்துள்ளார் நடிகை அம்பிரீன் பட். பிரபல் டிவி நடிகையான இவரது வீட்டிற்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்றனர். இதனையடுத்து அவரது மகளான 10 வயது சிறுமியையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பதறியடித்து வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
Also Read | சட்டென ஏறிய உள் நாட்டு பங்குச் சந்தைகள்… HDFC-ன் பங்குகளும் உயர்வு….!
இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டிற்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரளமான பாதுக்கப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…