திருவனந்தபுரம்:
பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து ஒன்று ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அதிகாலை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரி அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது சுற்றுலா பேருந்து வேகமாக மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…