பெங்களூர் அருகே சாலையோரம் நடந்து சென்ரவர் மீது கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெங்களூரு வெளிவட்டச் சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்ற 4 பேர் மீது மோதியது. இதில், அந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்தி காயமடைந்தவர்களை மீட்ட காவல்துரையினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து, ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…