சேந்தமங்கலத்தில் மூன்று தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி வல்வில் சிலைக்கு மாலை அணிவிக்க புதிய திராவிட கழக கட்சியினர் நாமக்கல்லில் இருந்து 20க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது சேந்தமங்கலம் பகுதியில் இருந்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினரும் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்துவதற்காக காரில் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பேருந்து நிலையம் அடுத்த ரவுண்டான அருகே சந்தித்திக்கொண்ட போது இரு தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அப்பகுதியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அப்பகுதி இளைஞர்கள் தட்டிக்கேட்டபோது மோதல் வெடித்து, கல், செங்கல் போன்ற ஆயுதங்களால் புதிய திராவிடர் கழகம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்களின் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் அங்கிருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமடைந்தது.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…