திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகி இயங்கி வரும் சைவ ஹோட்டலில் இருந்து காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர் துக்க நிகழ்ச்சிக்காக சாப்பாடு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று பரிமாறிய பீட்ரூட் பொரியலில் இருந்து எலி தலை தென்பட்டதாக கூறப்படுகிறது. அதனை கண்டு அதிர்ந்து போன முரளி மற்றும் அவர்கள் உறவினர்கள் அதனை கையில் எடுத்துக்கொண்டு நியாயம் கேட்க ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் நீங்கள் சாப்பாடு வாங்கி சென்று 6 நமி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. இப்பொழுது வந்து ஏலி தலை இருக்கிறது என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இருவரிடம் சமரசம் பேசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்காக உணவை அனுப்பியுள்ளனர். பிறகு பாதிக்கப்பட்ட முரளி அந்த சைவ உணவகத்தின் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…