தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் சாதிக்கொரு வரிசையாக சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெரியாரின் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக தமிழக அரசு கொண்டாடிய நிலையில், தென்காசியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடையில் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு என ஒரு வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள தொகரப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிலையில், ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்ட சைக்கிளில் சாக்பீஸால் பிசி, எம்பிசி, எஸ்சி என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மேலும் ஒரு கொடுமையாக, எஸ்சி என எழுதபட்டிருந்த சைக்கிள்கள் மட்டும் பிசி, எம்பிசி என எழுதப்பட்டிருந்த சைக்கிள்களில் இருந்து தனியாக பிரித்து நிறுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…